இந்த வார மரியாதை

உலக தமிழ் கவிதைக்கு மகாகவி பாரதியார் போல மலாயா தமிழ் கவிதை உலகிற்கு பெருமை சேர்த்த கவிஞர் காரைக்கிலார் அவர்களுக்கு இந்த வார புது வருட சிறப்பு மரியாதை. மலேசியா தமிழர் வாழ்கையை ரவிவர்மன் காமெரா போல் அழகாக படம் பிடித்தவர். கண்ணதாசனுக்கு விழா எடுக்கும் நம்மூர் தமிழ் நெஞ்சங்கள் காரைக்கிலார் அவர்களுக்கும் ஒரு விழா எடுத்தால் இன்னும் சிறப்பு.

பி.கு.
காரைக்கிலாரின் மரபு கவிதையை படித்து, எனக்குள் ஒரு தோற்றத்தை கற்பனை செய்து வைத்திருந்தேன். வெள்ளை வேட்டி சட்டையில் பிற்போக்கு வாதியாக இருப்பார் என்று நினைத்திருந்தேன். ஒரு முறை அவரை நேரில் பார்த்த போது அசந்து போனேன். அகன்ற நெற்றியும், தெளிவான பார்வையும்,ஸ்மாட்டார்ன நாகரிக உடையில் உயரிய கருத்துக்கள் பேசி என் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

0 கருத்துகள்: