முகிலனுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Hulu Selangor இடைத்தேர்தலில் நியாயமாக யாருக்கு அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும்.

பழனிவேலு, முகிலன், மற்றும் கமலநாதன் பெயர்கள் ஆராயப்பட்ட்து.

1. பழனிவேலு.

பழனிவேலுக்கு நிச்சயமாக அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்கு தனியாக அரசியல் அறிவு தேவை இல்லை.

2.

பழனியின் பெயர் நிராகரிகப்பட்டப் பின் நியாயமாக முகிலனுக்குதான் இந்த வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். அப்படி நடக்க வில்லை.

ஏன் முகிலனுக்கு அந்த வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் ???

a. இன்று மா.இ.காவில் பதவியில் இருக்கும் பல இளைஞர்கள்(டி.மோகன்,முருகேசன், இன்னும் பலர்) மா.இ.காவில் உறுப்பியம் பெருவதற்கு முன்பே முகிலன் மா.இ. காவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியிலும் பொது சேவையிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த கடந்த தேர்தலில் எல்லாம் கட்சியும், கட்சி சார்ந்த தேசிய முன்ன்னி வெற்றி பெறவும் பாடு பட்டவர். Hulu Selangor தொகுதியில் பழனிக்கு பிறகு மா.இ.கா வில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் முகிலன்.

b. துணை பிரதமர் உள்ளூர்வாசிக்கே வாய்ப்பு வழங்கப் படும் என்று கூறியிருந்தார். அப்படி பார்க்கையில் முகிலனுக்கு தான் அந்த வாய்ப்பு வழங்க பட்டிருக்க வேண்டும்.

c. கமலநாதனை விட அதிகம் படித்த, நிர்வாக திறன், அரசியல் அனுபவம் கொண்டவர் முகிலன்.

d. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, முகிலன் தமிழ் மொழி பற்றுக் கொண்டவர். இன்று மா. இ. கா வில் இருக்கும் இளைஞர்கள் பலருக்கும் தமிழ் மொழி பற்றும் மொழி அறிவும் கிடையாது. மா. இ. கா வில் துணை அமைச்சர் சரவனணுக்கு அடுத்து மொழி பற்றும் மொழி அறிவும் உடையவர் முகிலன். தமிழ் பள்ளியில் படிக்காமலும், தமிழ் மொழியை சரியாக பேச கூட தெரியாமலும் மா.இ.கா.வில் பதவி வகித்து வரும் இளைஞர்களுக்கு மத்தியில் முகிலன் மிக சிறந்த பேச்சாளரும் மொழி ஆற்றலும் உடையவர்.

பிறகு ஏன் முகிலனுக்கு வாய்ப்பு வழங்கப் படவில்லை.

a. மோகன். முகிலனுக்கு வாய்ப்பு வழங்கப் படாத்தற்கு மிக முக்கிய காரணம் டி. மோகன். முகிலன் இடைத் தேர்தலில் வென்று நாடாளுமன்ற உருப்பினர் ஆன பிறகு, ஏதாவது ஒரு அரசாங்க பதவி கிடைக்கும் பட்சத்தில் மோகன் இரண்டாம் நிலையாக கருதப் படுவார். ஒரு வேலை மந்திரி சபை மாற்றியமைக்கப் பட்டால், வெற்றி பெற்ற முகிலனுக்கு அதில் இடம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. குறந்த பட்சம் நாடாளுமன்ற செயலாளர் பதவியாவது.

b. முகிலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது மெல்ல மோகன் பின்னுக்கு தள்ளப்படுவார். ஒரு வேலை விக்னேஸ்வரன் போல் மா.இ.கா.வில் இருந்து காணாமல் போனாலும் போகலாம்.

c. சாமிவேலுக்கு ஏன் மோகன் மீது இவ்வளவு பாசம். இருக்காதா பின்னே. டி.மோகன் சாமிவேலுவின் சொந்த அத்தை மகன். ஒரு சாதி கார்ர்கள்.

d. அம்னோகார்ர்கள் முகிலன் பெயரை தான் சொன்னார்கள். நான் கடைசி வரை முகிலனுக்கு அந்த வாய்ப்பு வழங்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். சுபாங் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட முருகேசன் பெயரை சொன்னேன். கடைசியாகத்தான் கமலநாதன் என்று முடிவாகியது என்று சாமி ஆங்கில இணைய பக்கத்திற்கு பக்கத்தில் சோதிநாதனை வைத்துக் கொண்டு சொன்னார்.

e. முகிலன் செல்வாக்கு பெற்றால், மோகன் மெல்ல ஓரங்கட்டப் படுவார் என்ற ஒரே காரணத்துக்காக, தன் அத்தை மகனின் அரசியல் வாழ்வு பாதிக்கும் என ஒரே காரணத்துக்காக முகிலனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப் படவில்லை.

இந்த கட்டுரை எழுதியதால், நான் முகிலன் ஆதரவாளர் என்று பொருள் கிடையாது. ஏன் முகிலனுக்கு இந்த வாய்ப்பு வழங்ப்பட வில்லை என்பதுதான் என் கட்டுரை.