தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த வார கேள்வி ஒன்று கேட்க விரும்புகிறேன்.......
காந்தியை சுட்ட கோட்சே அவர் இனம், இந்திரா காந்தியை சுட்டு கொன்ற அந்த சீக்கியர் அவர் இனம், ராஜிவ் காந்தியை துப்பாக்கி மட்டையால் அடித்து கொலை செய்ய முயன்ற ஒரு பட்டாளத்துகாரர் அவர் இனம், இந்தியாவில் இன்று வரை தொடரும் இந்து முஸ்லீம் கலவரத்தை தொடக்கி வைத்த அலி சின்ன இவர் இனம் .. இன்னமும் இந்தியாவில்தான் இருக்கிறது. இவர்கள் மீது இல்லாத விரோதமும்,ஆத்திரமும் உங்களுக்கு ஈழ தமிழ் மக்கள் மீதும் அவர்கள் அமைதிக்காகவும் போராடிவரும் தலைவர் பிரபாகரன் மீதும் தொடர்வது உங்களுக்கு அநியாயமாக தெரியவில்லை...? அது போகட்டும்.... காந்தியை சுட்டவரும், இந்திரா காந்தியை சுட்டவரும் ஒரு இனத்தின் தியாகிகளாக போற்றி, அவர்களுக்கு விழா எடுக்கும் குறைந்த பட்ச உண்மையாவது உங்களுக்கு தெரியுமா...? உங்களின் நியாயமற்ற பேச்சுகளையும் அடாவடி போக்கையும் தமிழர்கள் மன்னித்து விடுவார்கள். அனால் காலம் மன்னிக்காது.