அமரர் கல்கி


வணக்கம்.
புதுக்கவிதைக்கு பாரதியார் முன்னோடி என்பது போல் தமிழ் நாவல் உலகிற்கு அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி முன்னோடி என்று துணிந்து கூறலாம். செய்யுள் மற்றும் பாடல் வடிவத்தில் நம் இலக்கியங்கள் செயல் பட்டு வந்த காலத்தில் நாவல் முறையில் கதை சொல்லும் வடிவை தமிழ் உலகிற்கு அறிமுக படுத்தியதில் அமரர் கல்கிக்கு பெரும் பங்கு உண்டு. சரிந்திர நாவல் எழுதி பெரும் புகழ் பெற்றவர்கள் அக்காலத்தில் இருவர். அவர்கள் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாண்டில்யன் ஆவார். கல்கி எழுதிய 'பார்த்திபன் கனவு,சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாதவை. சில வருடங்களுக்கு முன் 'கணையாழி' பத்திரிகை நடத்திய ஆய்வில் ஒருவர் கூட கல்கி அவர்களை சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யவில்லை. இதற்கான காரணத்தை யாராலும் சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இன்று வரை கல்கியின் புத்தகங்களுக்கு புது புது வாசகர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இன்று பெரும் எழுத்தாளர்களாக தங்களை கூறி கொள்ளும் எல்லோரும் கல்கி கதைகளில் தங்கள் வாசிப்பை தொடங்கிஇருப்பார்கள். இருந்தும் ஏனோ கல்கி கதைகளை சற்று தள்ளி வைத்துருப்பார்கள். ஏன் அவர் அதிகமான சமஸ்கிருத வார்த்தைகளை தன் கதைகளில் பயன் படுத்திய காரணமா? அல்ல சரித்திரங்களை தன் கதை கருவாக எடுத்து கொண்ட காரணமா? எது எப்படி இருப்பினும் கல்கி கதை மாந்தர்கள் நம் மனதை விட்டு நீண்ட காலம் அகலாமல் இருப்பார். இன்று நம்மிடையே வாசிப்பு பழக்கம் குறைத்து வருகிறது என்பதை நினைக்கும் போது மனம் பதற்றம் அடைகிறது. உங்கள் வாசிப்பு பழக்கத்தை வளர்த்து கொள்ள கல்கி அவர்களின் சரித்திர நாவல்கள் பெரிதும் துணை புரியும். 'பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை ஒரு முறை படித்து பாருங்கள். அமரர் கல்கியில் கதை சொல்லும் சூட்சம பாணி உங்களுக்கு புரியும்.



இந்த வார கேள்வி

இந்த வார கேள்வி .............

அமரர் ஆன Tan Sri பண்டிதனிடம் .......,
'யாருக்காக கட்சி தொடங்கிநிர்கள் .....? உங்கள் கொள்கை என்ன ...? உங்கள் கட்சியின் சாதனை என்ன....? கட்சியில் மூத்தவர்கள் பலர் உள்ளபோது, குடும்ப சொத்து போல் கட்சியின் தலைவர் பதவியை மனைவிக்கு கொடுத்தது ஏன்...? சாமிவேலுவை போல் நீங்களும் உங்கள் கட்சிக்கு அடுத்த கட்ட தலைவரை வளர்க்காமல் போனது ஏன்.....?

இன்று கோவில்கள் வியாபார கடைகளாக உரு மாறி வருகின்றன . குறைந்த பட்சம் 50 ரிங்கிட் இல்லாமல் கோவிலுக்கு செல்வது முடியாத காரியம். அர்ச்சனை சீட்டு 2 வெள்ளி , அர்ச்சகருக்கு தட்டில் 5 வெள்ளி போட வேண்டும், அடுத்து அர்ச்சகர் சொல்வார் 'சாமிக்கு மாலை வாங்கி போடுங்கோ ,' என்பார். மாலையின் விலை 30 வெள்ளி என்பார், இதோடு முடிந்தது என்று நினைபிர்கள் ... சுக்க்ரன்னுக்கு நெய் விளக்கு போடுங்கள் என்பார், விலையோ 10 வெள்ளி, சரி கிளம்பலாம் என்றால் சூடம் கொளுத்த மறந்து இருபிர்கள் , சூடம் விலை 6 என்பார் ஒரு பெட்டி. மீதம் இருக்கும் சில்லறையை அள்ளி உண்டியலில் போட்டு விட்டு வர வேண்டியதுதான்.

டீ அருந்தும் நேரம் ............