ஐ.பி.எப். கட்சி மாநாடுதான் இந்த வார வேடிக்கை. கட்சி மாநாடு நடந்த ஹோட்டல் முன் கட்சியின் ஒரு பிரிவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் எல்லா பத்திரிக்கை, தொலைகாட்சி செய்திகளில் முதன்மை செய்தியாக வந்தது. பிற இன மக்கள் மட்டும் அல்ல நாமும்தான் அதை வேடிக்கை பார்த்தோம். ஜனநாயகத்தின் மகிமையை பேசிய அமரர் டான் ஸ்ரீ பண்டிதன், தான் இறக்கும் தருவாயில் ஜனநாயகத்திற்கு புறம்பாக கட்சியின் தலைமை பொறுப்பை தன் மனைவியிடம் ஒப்படைத்ததன் விளைவுதான் இன்று நடக்கும் எல்லா கூத்துகளுக்கும் காரணம். ஜனநாயகத்துக்கு எதிராக யார் எது செய்தாலும் விளைவு எதிர் மறையாகத்தான் இருக்கும். இது எல்லா கட்சிக்கும் பொருந்தும். ஜாக்கிரத்தை.
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா 2026
12 மணிநேரம் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக