இந்த வார கேள்வி

நேற்றைய ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் வழங்கிய பேட்டியிலிருந்து சில கேள்விகள்.
1. இந்திய சமூதயத்திற்கு நான் நிறைய செய்துள்ளேன். உண்மை தெரியாதவர்கள் என்னை ஏசுகிறார்கள்.
- நீங்கள் செய்து வெற்றி அடைந்த ஒரு திட்டத்தை சொல்லுங்கள்....
1. பெட்டாலிங் ஜெயாவில் இயங்கிய வெண்டோ கல்லூரியை விற்று விட்டு, எதற்கும் பயன் படாத டேவ் கல்லூரியை கட்டியதா?
2. நட்டத்தில் ஓடிய அண்டனியன் பூக் ஷ்டோர் வாங்கி விற்றதையா?
3. பல கோடி வெள்ளியை முழுங்கிய செங்கல் தொழிற்சாலையையா..? அல்லது அந்த ஜூஷ் தொழிற்சாலையையா...?
4. ஜாலான் ஈப்போவில் வாங்கிய கட்சி நிலத்தை விற்று அதன் பணத்தில் பண்டார் உதாமாவில் நிலம் வாங்கியதையா...?

இப்படி அடுக்கிக்கொண்டே போக பல பத்து கேள்விகள் இருக்கிறது .

2. 29 ஆண்டுகள் ஓயாமல் இந்தியர்களின் நலனை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
* அதனால்தான் உங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டதா..?

3. மக்கள் இன்னும் என் சேவை வேண்டும் என்பதால்தான் மீண்டும் 11 முறையாக என்னை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள்.....
* ஏந்த மக்கள்....? சரியாக பாரம் கூட பூர்த்தி செய்ய தெரியாத அந்த முட்டாள் கூட்டமா?(தலைவருக்கு மொத்தம் 115 செல்லாத வேட்பு மனு பாரங்கள் கிடைத்துள்ளது-சேய்தி)

உங்களிடம் கேட்க 100 கேள்விகளுடன் அடுத்த வாரம் வருகிறேன்.

1 கருத்துகள்:

manokarhan krishnan சொன்னது…

உன்மையில் நல்ல பல கருத்துகள் உங்களின் பதிவில் கண்டு மகிழ்ந்தேன்.தமிழனுக்கு உரைக்குமா?