இந்த வார வேதனை

பெட்டாலிங் ஜெயாவில் ஏழு வயது சிறுவனைக் கடத்தி 1மில்லியன் பிணைப் பணம் வாங்கிய கடத்தல் குற்றசாட்டு வழக்கில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 13 பேர்கள் கைதாகி விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப் பட்டனர். கைக்குழந்தையுடன் இரண்டு பெண்மணிகள் கையில் விலங்கோடு படம் பிடித்து பத்திரிகையில் வெளியான புகைப்படத்தைப் பார்த்தது மிகுந்த அதிர்ச்சியும் அளவு கடந்த வேதனையும் அடந்தேன். குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் தன்குடும்பத்தையும் ஆபத்திலும் துன்பத்திலும் மாட்டி விடுவது வேதனையை விட மிகுந்த ஆத்திரத்தையே உண்டாக்குகிறது. சரியான வழிகாட்டுதலும், சமய அறிவும்,கல்வி அறிவும் இல்லாததே இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக இருக்கிறது. நமது பொது இயக்கங்கள், அரசியல் கட்சிகள் தலைமைதுவ சண்டைக்கும், அரசாங்கம் தரும் சலுகைகளை அனுபவிப்பதற்கும் நேரம் போதுமானதாய் இல்லை. சமுதாய குடும்ப சிக்கல்கள், அதனால் ஏப்படும் சமூதாய சீர்கேடுகள், இது போன்ற சிக்கல்கள் ஏற்படா வண்ணம் இருக்க எதிர்கால திட்டம் இவைகளைப் பற்றி யோசிக்க எங்கே இருக்கிறது நேரம்.

0 கருத்துகள்: