இந்த வார வருத்தம்

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் அடிக்கடி இந்த தமிழ் செய்தி நேர மாற்ற பிரச்சனை நடந்துக் கொண்டே இருக்கிறது. நம் நாட்டில் உள்ள எல்லா சிறிய, மிக சிறிய, பெரிய, மிக மிக பெரிய, ஏழே ஏழு உறுப்பினர்கள் கொண்ட இயக்கம்,மன்றம்,கட்சி, இன்னும் யாரெல்லாம் தலைவர்களாக இருக்கிறார்களோ, அத்துனை பேரும் அறிக்கை விட்ட பின், மலேசிய இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே.....ஒரு கட்சியான மா.இ.கா-வில் பதவியில் உள்ள ஒரு வல்லமை படத்த தலைவர் தகவல் அமைச்சரிடம் பேசி முழுகி பிரச்சனையை தீர்த்து வைப்பார். இதில் கொடுமை என்ன என்றால், இந்த கூத்து எனக்கு 10 வயது இருக்கும் போதிலிருந்தே நடக்கிறது. இப்போது எனக்கு வயது 34. இன்று வரை நமக்கு என்ன தேவை, தேவை இல்லை என்று எடுத்து கூற, ஒரு திட்டம் தீட்ட, எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய இன்று உள்ள எந்த தலைவருக்கும் போதிய அறிவு, நாட்டம், சமூதாய பற்று, திறன் எதுவும் இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை.

0 கருத்துகள்: