2008-இல் நான் ரசித்த பத்து படங்கள்

  1. அஞ்சாதே- நவின இலக்கியம் போல் நகரும் திரைகதை. வில்லன் தந்தை சூடு பட்டு விழும் காட்சியை கண்டு பதறும் சிறுவனின் உணர்ச்சிகள் நம் மனதை பிழிகின்றன.
  2. தசாவதாரம்-மைக்கல் மதன காம ராஜனக்கு பிறகு ஒன்றுக்கு மேல் பட்ட கதாபாத்திரங்களை திரைகதையில் பின்னி பத்து வேடங்களில் நம்மை அசத்திய படம்.
  3. அறை எண் 305-இல் கடவுள்-புலிகேசி அளவுக்கு நகைசுவை இல்லை என்றாலும்,நகைச்சுவை ப்ளஸ் கருத்துக்கள் என கலந்து கட்டிய படம்.
  4. பொல்லாதவன்-ஒரு சின்ன மோட்டார் சைக்கிள் திருட்டை மையமாக கொண்டு அதனால் ஒருவன் படும் இன்னல்களை நமக்கு காட்டிய படம்.
  5. வாழ்த்துக்கள்-பிற மொழி கலப்பு இல்லாமல் படம் முழுக்க நல்ல தமிழில் வசனம் பேசி நம் மனதை கவர்ந்த படம். சீமானுக்கு வாழ்த்துக்க்கள்.
  6. கல்லூரி-மெல்லிய காதல்,கல்லூரி நட்பு,எளிமையான காட்சி அமைப்பு,சிறந்த இசை,அதிர்ச்சியான முடிவு...... படம் முடிந்தும் நம் மனதை விட்டு நீங்க திரைகதை. ஒரே மாதிரி பேசும் அந்த இரட்டையர் காட்சிகள் நல்ல கலகலப்பு.
  7. நேபாளி-மூன்று கோண கதையை குழப்பாமல்,வேறு வேறு கலர் டோனில் கதை சொன்ன விதம் அருமை.
  8. சரோஜா-திரில்லர் கதையில் கட்சிக்கு காட்சி சிரிப்பு வெடி. கதைதான் நாயகன். கதையை மட்டுமே நம்பி எடுத்த படம். ஹேண்ட்ஸ் அப் வெங்கட் பிரபு.
  9. அலிபாபா-வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல சஸ்பென்ஸ் படம் பார்த்த திருப்தி. காட்சிக்கு காட்சி திருப்புமுனை.
  10. பொம்மலாட்டம்-சிகப்புரோஜாக்கள்கேப்டன் மகள் படங்களுக்கு பிறகு பாரதிராஜா இயக்கியிருக்கும் த்ரில்லர் படம். யாரும் எதிர்பார்காத முடிவு.

0 கருத்துகள்: