இந்த வார கேள்வி

மா.இ.கா. இளைஞர் பிரிவு தலைவர் மோகனிடம் ஒரு கேள்வி.

எதிர்கட்சி இந்திய நாடளுமன்ற உறுப்பினர்கள் திடிர் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள். பங்களா வீடு, சொகுசு கார்கள் என்று exclusive-ஆக வாழ்கிறார்கள் என்று கூறியிருக்கிறீர்கள்.

இந்த 6 வருடங்களில் உங்களின் அபார வளர்ச்சி எத்தனை பேருக்கு தெரியும். உங்களுடைய பழைய வீடும் தற்போதைய புதிய பங்களாவும் எல்லோருக்கும் தெரியுமா? உங்கள்டைய புதிய கார் பற்றி தெரியுமா ....? உங்கள் தம்பி D.A.P டி.கண்ணன் என்பது எல்லோருக்கும் தெரியுமா...? உங்கள் தம்பி லிம் கியட் சியங்கின் செயலாளர் என்பது எத்தனை பேருக்கும் தெரியும் ....? உங்கள் தம்பி D.A.P சார்ப்பில் Kg.Tungku PJ தொகுதியில் நின்று தோற்று போனது எத்தனை பேருக்கு தெரியும் .....?

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலா நீங்கள் மா.இ.கா.வில் இணைந்தீர்கள்...?


இந்த வார கோபம்

கோபம் 1. ஆற்று பாலம் விழுந்து 3 சிறுமிகள் பலி. துயர சம்பவம் நடந்த பின்னரே அதற்கான காரணம்,விசாரணை,மாநில தேசிய அளவிலான விசாரணை என அமர்களபடுவது வாடிக்கையும் வேடிக்கையும் ஆகிவிட்டது. இம்மூன்று குடும்பத்தினருக்கு யார் பொறுப்பான பதில் சொல்வது.

கோபம் 2. கடந்த பொது தேர்தலில் அதிகமான இந்தியர்கள் எதிகட்சிசார்பாக வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்கள். இவர்கள் ம.இ.காவை போல் அல்லாமல் உண்மையான சமுதாயத்திற்கு சேவை செய்ய போவதாக உறுதி சொன்னார்கள். 20 இந்திய எம்.பி.கள் கொண்ட குழு எம்.ஐ.இ.டி. பற்றி விசாரிப்பதற்கு மா.இ.கா கட்டடத்திற்கு போக போவதாக சொன்னார்கள். ஆனால் ஒரே ஒரு இந்திய எம்.பி. மட்டும் போய் நமக்கு கோபத்தை உண்டு செய்திருக்கிறார்கள். உள்ளூரில் உள்ள வாய் சவடால் பேசும் சந்தியாகோ,மணிவாசகம்,மாணிக்கவாசகம்,குலசேகரன் இன்னும் பலர் ஆதவன் படம் பார்க்க போய் விட்டார்களா என்ன?


கோபம் 3. இந்திய தூதரகம் தொட்ங்கிய கலை கலாச்சார மன்ற விழாவில் நிறைய தமிழர்கள் முகம். தொடக்கி வைத்தது அமைச்சர் கோகிலன் பிள்ளை. தமிழர் உணர்வுகளை எப்போதும் இந்தியாவும் சரி இந்திய தூதரகங்களும் சரி மதிப்பதில்லை. அனால் இங்குள்ள தமிழர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் என்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். சில மாதகளுக்கு முன்பு இதே தூதரகம் முன் ஈழ தமிழர்களுக்காக மறியல் செய்ததை எல்லாம் மறந்து விட்டனர் தமிழர்கள்.