இந்த வார குட்டு.

இந்த வார குட்டு பி.பி.பி. கட்சியின் தலைவர் டத்தோ கேவிஎஸ்-க்கு. துணையமைச்சர் செனட்டர் முருகையாவை கட்சியில் இருந்து நீக்குவதற்கு இரண்டு காரணம் கூறியிருந்தீர்கள்.
காரணம் ஒன்று.
முருகையா பண அரசியலில் ஈடுப்பட்டார்.
காரணம் இரண்டு.
தலைவர் பதவிக்காக முருகையா சதி வேலையில் ஈடுபட்டார்.

முதல் காரணத்திற்கான கேள்வி.
உங்கள் கட்சியில் தேர்தல் என்பதே நடக்கவில்லை. பிறகு எதற்காகா அவ்ர் பண அரசியலில் ஈடுபட வேண்டும். அப்படியே பண அரசியலில் ஈடுபட்டிருந்தால், தக்க ஆதாரத்துடன் நிறுப்பித்துயிருக்க வேண்டும். அப்படி செய்ய நீங்கள் தவறி விட்டீர்கள்.

காரணம் இரண்டிற்கான கேள்வி.
ஒரு ஞனநாயக நாட்டில் உள்ள ஒரு ஞனநாயக கட்சியில் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அதை எதிர்கொள்வதற்கு உங்களிடம் தைரியமும் விவேகமும் இல்லாது போனது ஏன்? உங்களுக்கும் சாமிவேலுவுக்கும் பிறகு என்ன வித்தியாசம்.

பி.கு.
மலாய் தலைவர்களுடன் பல துணிச்சலான விவாதங்கள் நடத்தியிருக்கிறீர்கள். ஆனால் முருகையா விசயத்தில் உங்கள் போக்கு கொஞ்சமும் சரியில்லை.

0 கருத்துகள்: